சங்கீதம் 34:1-22

அபிமெலேக்கின் முன்னால் பைத்தியம்போல் நடித்து,+ அவனால் துரத்தப்பட்ட பிறகு, தாவீது பாடிய பாடல். א [ஆலெஃப்] 34  எல்லா சமயத்திலும் நான் யெகோவாவைப் புகழ்வேன்.என் உதடுகள் ஓயாமல் அவரைப் புகழும். ב [பேத்]   நான் யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்.+தாழ்மையானவர்கள்* அதைக் கேட்டு சந்தோஷப்படுவார்கள். ג [கீமெல்]   என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்.+நாம் ஒன்றுசேர்ந்து அவருடைய பெயரை மெச்சிப் பேசலாம். ד [டாலத்]   நான் யெகோவாவிடம் விசாரித்தேன், அவர் எனக்குப் பதில் சொன்னார்.+ எல்லா பயத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார்.+ ה [ஹே]   அவரை நம்பியிருந்தவர்களின் முகங்கள் பிரகாசித்தன.அவர்களுடைய முகங்களில் அவமானமே இல்லை. ז [ஸாயின்]   இந்த எளியவன் கூப்பிட்டபோது யெகோவா கேட்டார். எல்லா இக்கட்டிலிருந்தும் என்னை விடுவித்தார்.+ ח [ஹேத்]   யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களைஅவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+ ט [டேத்]   யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்.+அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள். י [யோத்]   யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+ כ [காஃப்] 10  பலமுள்ள இளம் சிங்கங்கள்கூட இரை இல்லாமல் தவிக்கலாம்.ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கு ஒரு குறையும் வராது.*+ ל [லாமெத்] 11  என் மகன்களே, வாருங்கள்; நான் சொல்வதைக் கேளுங்கள்.யெகோவாவுக்குப் பயந்து நடக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.+ מ [மேம்] 12  நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா?நீண்ட காலத்துக்கு நன்றாக வாழ ஆசைப்படுகிறீர்களா?+ נ [நூன்] 13  அப்படியானால், கெட்ட விஷயங்களைப் பேசாதபடி உங்கள் நாவையும்,+பொய் பேசாதபடி உங்கள் உதடுகளையும் அடக்கி வையுங்கள்.+ ס [சாமெக்] 14  கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+ ע [ஆயின்] 15  யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+ פ [பே] 16  ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.அவர்களைப் பற்றிய நினைவுகூட இந்தப் பூமியில் இல்லாதபடி அவர் செய்துவிடுவார்.+ צ [சாதே] 17  நீதியுள்ளவர்கள் உதவி கேட்டுக் கெஞ்சியபோது யெகோவா கேட்டார்.+எல்லா வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றினார்.+ ק [கோஃப்] 18  உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.+மனம் நொந்துபோனவர்களை* அவர் காப்பாற்றுகிறார்.+ ר [ரேஷ்] 19  நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+ ש [ஷீன்] 20  அவருடைய எல்லா எலும்புகளையும் அவர் பாதுகாக்கிறார்.அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படுவதில்லை.+ ת [ட்டா] 21  பொல்லாதவன் பேரழிவில் செத்துப்போவான்.நீதிமானை வெறுக்கிறவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள். 22  யெகோவா தன்னுடைய ஊழியர்களின் உயிரை மீட்கிறார்.அவரிடம் தஞ்சம் அடைகிற யாருமே குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சாந்தமானவர்கள்.”
வே.வா., “எந்த நன்மையும் கிடைக்காமல் போகாது.”
வே.வா., “சோர்ந்துபோனவர்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா