நீதிமொழிகள் 25:1-28

25  இவையும் சாலொமோனின் நீதிமொழிகள்;+ இவற்றை யூதாவின் ராஜாவான எசேக்கியாவின்+ ஆட்கள் தொகுத்து, நகலெடுத்தார்கள்:   எந்த விஷயத்தையும் ரகசியமாக வைப்பது கடவுளுக்கு மகிமை.+எந்த விஷயத்தையும் தீர ஆராய்வது ராஜாவுக்குப் பெருமை.   வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் தெரிந்துகொள்ள முடியாததுபோல்,ராஜாவின் உள்ளத்தில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியாது.   வெள்ளியில் இருக்கிற கசடை எடுத்துப்போடு.அப்போது, அது சுத்தமான வெள்ளியாகப் பளபளக்கும்.+   ராஜாவின் முன்னாலிருந்து பொல்லாதவனைத் துரத்திவிடு.அப்போது, அவருடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.+   ராஜாவுக்கு முன்னால் உன்னை உயர்த்தாதே.+முக்கியப் பிரமுகர்களின் நடுவே உட்காராதே.+   ராஜா உன்னைப் பெரிய மனிதர்கள் முன்னால் அவமானப்படுத்துவதைவிட, “இங்கே வந்து உட்கார்” என்று அவராகவே சொல்வதுதான் மேல்!+   அவசரப்பட்டு ஒருவன்மேல் வழக்கு போடாதே.உன்மேல் தப்பு இருப்பதாக அவன் நிரூபித்துவிட்டால் என்ன செய்வாய்?+   அதனால், பிரச்சினையை அவனோடு நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்.+ஆனால், அவன் உன்னிடம் சொன்ன ரகசியங்களை* அம்பலப்படுத்தாதே.+ 10  ஏனென்றால், நீ யாரிடம் ரகசியத்தைச் சொல்கிறாயோ அவனே உன்னை அவமானப்படுத்திவிடுவான்.நீ மோசமான விஷயத்தை* பரப்பிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியாதே! 11  சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தைவெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்.+ 12  ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+ 13  குளிர்ந்த பனி அறுவடை நாளில் புத்துணர்ச்சி தருவதுபோல்,உண்மையுள்ள தூதுவனும் தன் எஜமானுக்குப் புத்துணர்ச்சி தருகிறான்.+ 14  அன்பளிப்பு கொடுப்பதாகப் பெருமையடித்துவிட்டு அதைக் கொடுக்காமல் இருக்கிறவன்,மழை தராத மேகங்களையும் காற்றையும் போல இருக்கிறான்.+ 15  பொறுமையால் அதிகாரியை வெல்லலாம்.மென்மையான* நாவினால் எலும்பையும் நொறுக்கிவிடலாம்.+ 16  நீ தேனைக் கண்டால், அதை அளவோடு சாப்பிடு.அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடுவாய்.+ 17  அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே.போனால், அவன் அலுத்துப்போய் உன்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவான். 18  அடுத்தவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்கிறவன்தடியையும்* வாளையும் கூர்மையான அம்பையும் போல் இருக்கிறான்.+ 19  கஷ்ட காலங்களில் பொறுப்பில்லாதவனை* நம்புவதுஉடைந்த பல்லையும் நொண்டுகிற காலையும் நம்புவதற்குச் சமம். 20  சோகத்தில் வாடுகிறவனுக்கு முன்பாகப் பாட்டுப் பாடுகிறவன்,+குளிர் காலத்தில் உடையைக் கழற்றுகிறவன் போலவும்,சோடா உப்பின் மேல் ஊற்றப்படுகிற காடியைப் போலவும் இருக்கிறான். 21  உன் எதிரி பசியாக இருந்தால் அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு.அவன் தாகமாக இருந்தால் அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடு.+ 22  இப்படிச் செய்யும்போது, நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பாய்.*+யெகோவா உனக்குப் பலன் கொடுப்பார். 23  வடக்கிலிருந்து வீசுகிற காற்று கனமழையை வர வைக்கும். வம்பளக்கிற வாய் மற்றவர்களுக்குக் கோபத்தை வர வைக்கும்.+ 24  சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+ 25  தூர தேசத்திலிருந்து வருகிற நல்ல செய்தி,தாகத்தில் தவிப்பவனுக்குக் கிடைக்கிற குளிர்ந்த தண்ணீரைப் போல் இருக்கிறது.+ 26  பொல்லாதவனுக்கு இணங்கிப்போகிற நீதிமான்,கலங்கிய நீரூற்று போலவும் பாழடைந்த கிணறு போலவும் இருக்கிறான். 27  அளவுக்கு அதிகமாகத் தேன் சாப்பிடுவது நல்லதல்ல.+தனக்குத் தானே புகழ் தேடுவதும் புகழல்ல.+ 28  கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன்,மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மற்றவர்களுடைய ரகசியங்களை.”
வே.வா., “வதந்தியை.”
வே.வா., “சாந்தமான.”
வே.வா., “தண்டாயுதத்தையும்.”
வே.வா., “நம்ப முடியாதவனை.” அல்லது, “துரோகியை.”
அதாவது, ஒருவரைச் சாந்தப்படுத்தி, அவருடைய கல்நெஞ்சைக் கரைய வைப்பதைக் குறிக்கிறது.
வே.வா., “நச்சரிக்கிற.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா