கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 10:1-33

10  சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+  அவர்கள் எல்லாரும் மோசேயைப் பின்தொடர்ந்தபோது மேகத்தாலும் கடலாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.  கடவுள் கொடுத்த உணவையே எல்லாரும் சாப்பிட்டார்கள்.+  கடவுள் கொடுத்த தண்ணீரையே எல்லாரும் குடித்தார்கள்.+ தங்களைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் தோன்றிய கற்பாறையின் தண்ணீரைக் குடித்தார்கள். கடவுள் தந்த அந்தக் கற்பாறை கிறிஸ்துவைக் குறித்தது.*+  இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர்மீது கடவுள் பிரியப்படவில்லை; அதனால் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.+  அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+  அவர்களில் சிலரைப் போல் நாமும் சிலைகளை வணங்காமல் இருப்போமாக; எழுதப்பட்டிருக்கிறபடியே, “ஜனங்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், சந்தோஷமாக இருந்தார்கள்.”+  அவர்களில் சிலர் பாலியல் முறைகேட்டில்* ஈடுபட்டதால் ஒரே நாளில் 23,000 பேர் செத்துப்போனார்கள்; அவர்களைப் போல் நாமும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடாமல் இருப்போமாக.+  அவர்களில் சிலர் யெகோவாவை* சோதித்துப் பார்த்ததால்+ பாம்புகளால் கொல்லப்பட்டார்கள்; அவர்களைப் போல் நாமும் அவரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது.+ 10  அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக. 11  அவர்களுக்கு நடந்ததெல்லாம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. இந்த உலகத்தின்* முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக எழுதப்பட்டிருக்கின்றன.+ 12  அதனால், தான் நிற்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறவன் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.+ 13  மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை.+ ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார்.+ அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.+ 14  அதனால், என் அன்புக் கண்மணிகளே, சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.+ 15  நீங்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்று நினைத்துப் பேசுகிறேன்; நான் சொல்வதை நீங்களே யோசித்து முடிவுசெய்யுங்கள். 16  நாம் கடவுளைப் புகழ்ந்து ஆசீர்வாதக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ ரொட்டியைப் பிட்டுச் சாப்பிடும்போது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம், இல்லையா?+ 17  ரொட்டி ஒன்றுதான்; அந்த ஒரே ரொட்டியை நாம் எல்லாரும் சாப்பிடுவதால், நாம் நிறைய பேராக இருந்தாலும், ஒரே உடலாக இருக்கிறோம்.+ 18  இஸ்ரவேல் வம்சத்தாரை நினைத்துப் பாருங்கள்; பலியிடப்பட்டதைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு சேர்ந்து பங்குகொள்கிறார்கள், இல்லையா?+ 19  அப்படியானால், சிலைக்குப் பலியிடப்பட்டதோ சிலையோ முக்கியம் என்றா சொல்கிறேன்? 20  இல்லை; இந்த உலக மக்கள், கடவுளுக்குப் பலி செலுத்தவில்லை, பேய்களுக்கே பலி செலுத்துகிறார்கள்+ என்றுதான் சொல்கிறேன்; நீங்கள் பேய்களோடு பங்குகொள்வதில் எனக்கு விருப்பமில்லை.+ 21  யெகோவாவின்* கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; “யெகோவாவின்* மேஜையிலும்”+ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே. 22  ‘நாம் யெகோவாவின்* கோபத்தைக் கிளறலாமா?’+ அவரை எதிர்க்கிற பலம் நமக்கு இருக்கிறதா? 23  எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லாமே பிரயோஜனமானவை கிடையாது; எல்லாவற்றையும் அனுபவிக்க ஒருவனுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எல்லாமே பலப்படுத்துவதில்லை.+ 24  ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.+ 25  சந்தையில் விற்கிற எந்த இறைச்சியையும் வாங்கிச் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள். 26  ஏனென்றால், “பூமியும் அதிலிருக்கிற அனைத்தும் யெகோவாவுக்குத்தான்* சொந்தம்.”+ 27  விசுவாசியாக* இல்லாத ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்; உங்கள் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காக எதையும் விசாரிக்காதீர்கள். 28  ஆனால், “இது சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று ஒருவன் உங்களிடம் சொன்னால், அவன் அப்படிச் சொன்னதற்காகவும் மனசாட்சி உறுத்தாமல் இருப்பதற்காகவும் அதைச் சாப்பிடாதீர்கள்.+ 29  உங்களுடைய மனசாட்சியைப் பற்றிச் சொல்லவில்லை, மற்றவனுடைய மனசாட்சியைப் பற்றித்தான் சொல்கிறேன். எனக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் இன்னொருவனுடைய மனசாட்சியால் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்?+ 30  நான் கடவுளுக்கு நன்றி சொல்லிச் சாப்பிட்டால், அப்படி நன்றி சொல்லிச் சாப்பிடுகிற அந்த உணவால்+ நான் ஏன் பழிப்பேச்சுக்கு ஆளாக வேண்டும்? 31  அதனால், நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.+ 32  யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ கடவுளுடைய சபைக்கோ தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 33  ஏனென்றால், நானும் அப்படியே எல்லா விஷயங்களிலும் எல்லாருக்கும் பிரியமாக நடக்க முயற்சி செய்கிறேன்; எனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல்,+ நிறைய பேர் மீட்புப் பெறுவதற்காக அவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேடுகிறேன்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கிறிஸ்துதான்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “சகாப்தங்களின்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “அனுமதி.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “இயேசுவின் சீஷராக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா