Skip to content

யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் மட்டும்தான் மீட்பு பெறுவோம் என்று நினைக்கிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் மட்டும்தான் மீட்பு பெறுவோம் என்று நினைக்கிறார்களா?

 இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, யெகோவாவின் சாட்சிகளில்லாத லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்பு பெற வாய்ப்பு இருக்கிறது. கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:15) கூடுதலாக, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அநேகர் எதிர்காலத்தில் கடவுளுக்கு சேவைசெய்ய ஆரம்பிக்கலாம், இவர்களும் மீட்பு பெறுவார்கள். எப்படியிருந்தாலும், இவர்கள் மீட்பு பெறுவார்கள், இவர்கள் அழிந்துவிடுவார்கள் என தீர்ப்பளிப்பது எங்கள் வேலை அல்ல. அந்த பொறுப்பு முழுமையாக இயேசுவின் கையில் இருக்கிறது.—யோவான் 5:22, 27.