Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 122

அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!

அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!

(1 கொரிந்தியர் 15:58)

  1. 1. சோதனை, தீயாய் நம்மை சூழ்ந்தாலும்,

    வேதனை, வாள் போல் நம்மேல் பாய்ந்தாலும்,

    சோர்ந்து போகாமல் நாம் எந்நாளுமே,

    தேவனை சேவிப்போமே.

    (பல்லவி)

    தூண் போல் விழாமல் நிற்போம்.

    நெஞ்சில் வீரம் சேர்ப்போம் நாம்.

    வாழும் காலம் எல்லாம்,

    உண்மைத்தன்மை காப்போம்.

  2. 2. பாவத்தின் ஆசைகள் நம் வாழ்வெல்லாம்,

    காற்று போல் எங்கெங்கும் சூழ்ந்துள்ளதே.

    நன்மையால் தீமைகள் நாம் வென்றிட,

    நாளெல்லாம் போராடுவோம்.

    (பல்லவி)

    தூண் போல் விழாமல் நிற்போம்.

    நெஞ்சில் வீரம் சேர்ப்போம் நாம்.

    வாழும் காலம் எல்லாம்,

    உண்மைத்தன்மை காப்போம்.

  3. 3. தேவனை நெஞ்சார நாம் நேசிப்போம்.

    எல்லோர்க்கும் நல்ல செய்தி சொல்லுவோம்.

    கண்களின் கண்ணீர் மாறும் காலத்தை,

    என்றும் நம் கண் முன் வைப்போம்.

    (பல்லவி)

    தூண் போல் விழாமல் நிற்போம்.

    நெஞ்சில் வீரம் சேர்ப்போம் நாம்.

    வாழும் காலம் எல்லாம்,

    உண்மைத்தன்மை காப்போம்.

(பாருங்கள்: லூக். 21:9; 1 பே. 4:7.)