Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நடுவர்கள்

நடுவர்கள்

பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மாகாணங்களில் இருந்த காவல்துறை நடுவர்கள், படைத்துறை சாராத ஊழியர்களாக இருந்தார்கள். இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருந்தது, தீர்ப்பளிக்கும் அதிகாரமும் ஓரளவு இருந்தது. ரோமக் குடியேற்றப் பகுதிகளில் இருந்த அரசு நடுவர்கள் அரசு நிர்வாகிகளாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது, நிதி நிலைமையைக் கட்டுப்படுத்துவது, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுப்பது, தண்டனையை நிறைவேற்ற கட்டளை கொடுப்பது போன்றவை இவர்களுடைய வேலையாக இருந்தது.—தானி 3:2; அப் 16:20.