Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரகாரம்; முற்றம்

பிரகாரம்; முற்றம்

வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியிருந்த திறந்தவெளிப் பகுதி பிரகாரம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் ஒரு மறைப்பு இருந்தது. பிற்பாடு, ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்தைச் சுற்றியிருந்த திறந்தவெளி பகுதியும் பிரகாரம் என்று அழைக்கப்பட்டது; இதைச் சுற்றிலும் சுவர் இருந்தது. வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரத்திலும், ஆலயத்தின் உட்பிரகாரத்திலும் தகன பலி செலுத்துவதற்காகப் பலிபீடம் வைக்கப்பட்டிருந்தது. (இணைப்பு B5, B8, B11-ஐப் பாருங்கள்.) அரண்மனை மற்றும் வீடுகளில் திறந்தவெளிப் பகுதிகள் இருந்ததாக பைபிள் சொல்கிறது; இவை முற்றம் என்று அழைக்கப்படுகின்றன.—யாத் 8:13; 27:9; 1ரா 7:12; எஸ்தர் 4:11; மத் 26:3.