Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெந்தெகொஸ்தே

பெந்தெகொஸ்தே

யூத ஆண்கள் எல்லாரும் எருசலேமில் கொண்டாட வேண்டியிருந்த முக்கியமான மூன்று பண்டிகைகளில் இது இரண்டாவது பண்டிகை. பெந்தெகொஸ்தே என்றால் “ஐம்பதாவது (நாள்)” என்று அர்த்தம். அறுவடையின் பண்டிகை அல்லது வாரங்களின் பண்டிகை என்று எபிரெய வேதாகமத்தில் அழைக்கப்படுகிற பண்டிகைதான், கிரேக்க வேதாகமத்தில் பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்படுகிறது. நிசான் 16-ஆம் தேதியிலிருந்து சரியாக 50-வது நாளில் இது கொண்டாடப்பட்டது.—யாத் 23:16, அடிக்குறிப்பு; 34:22; அப் 2:1.