Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன்னா

மன்னா

இஸ்ரவேலர்கள் 40 வருஷங்களாக வனாந்தரத்தில் இருந்தபோது சாப்பிட்ட முக்கிய உணவு. யெகோவா இதை அவர்களுக்குக் கொடுத்தார். ஓய்வு நாளைத் தவிர ஒவ்வொரு நாள் காலையிலும், தரைமேல் இது அற்புதமாகக் கிடந்தது. பனிப் படலம் இதை மூடியிருந்தது. இஸ்ரவேலர்கள் இதை முதன்முதலில் பார்த்தபோது, “இது என்ன?” (எபிரெயுவில், “மான் ஹூ?”) என்று கேட்டார்கள். (யாத் 16:13-15, 35) மற்ற வசனங்களில், ‘வானத்தின் தானியம்’ (சங் 78:24), ‘வானத்திலிருந்து வந்த உணவு’ (சங் 105:40), ‘பலசாலிகளின் உணவு’ (சங் 78:25) என்றெல்லாம் இது விவரிக்கப்பட்டுள்ளது. இயேசுவும் மன்னாவைப் பற்றி அடையாள அர்த்தத்தில் குறிப்பிட்டார்.—யோவா 6:49, 50.