பிலிப்பியருக்குக் கடிதம் 2:1-30

2  கிறிஸ்தவர்களான நீங்கள் ஒருவருக்கொருவர் உற்சாகத்தையும், அன்பினால் ஆறுதலையும், அக்கறையையும், கனிவான பாசத்தையும், கரிசனையையும் காட்டுகிறீர்கள் என்றால்,  ஒரே சிந்தையோடும் ஒரே அன்போடும் ஒரே உள்ளத்தோடும் ஒரே யோசனையோடும் அதைச் செய்து என்னைச் சந்தோஷத்தால் நிரப்புங்கள்.+  எதையும் பகையினாலோ+ வறட்டு கௌரவத்தினாலோ+ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.+  உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல்,+ மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.+  கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும்.+  அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும்,+ கடவுளுடைய ஸ்தானத்தைப் பறித்துக்கொள்ளவோ அவருக்குச் சமமாக இருக்கவோ நினைக்கவில்லை.+  அதற்குப் பதிலாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார்,+ ஒரு மனிதராக ஆனார்.+  அதுமட்டுமல்ல, அவர் மனிதராக வந்தபோது சாகும் அளவுக்கு, ஆம், சித்திரவதைக் கம்பத்தில்*+ சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.+  அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார்.+ மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்.+ 10  பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும் என்பதற்காகவும்,+ 11  இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் அப்படிச் செய்தார். இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான். 12  என் அன்புக் கண்மணிகளே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள். நான் உங்களோடு இருந்த சமயத்தில் மட்டுமல்ல, உங்களோடு இல்லாத இந்தச் சமயத்திலும் இன்னும் நன்றாகக் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள். 13  கடவுள்தான் தனக்குப் பிரியமானதைச் செய்வதற்கான ஆர்வத்தையும் வல்லமையையும் உங்களுக்குக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துகிறார். 14  எல்லாவற்றையும் முணுமுணுக்காமலும்+ வாதாடாமலும்+ செய்துகொண்டிருங்கள். 15  அப்போதுதான், வாழ்வு தரும் வார்த்தையை உறுதியாகப் பிடித்துக்கொண்டும்+ இந்த உலகத்தில் விளக்குகளாக ஒளிவீசிக்கொண்டும் இருக்கிற நீங்கள்,+ சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின்+ நடுவே குற்றமில்லாதவர்களும் கபடமில்லாதவர்களும் கடவுளுடைய களங்கமில்லாத பிள்ளைகளுமாக+ இருப்பீர்கள். 16  அப்போது, நான் உழைத்ததும் வீண்போகவில்லை, பாடுபட்டதும் வீண்போகவில்லை என்பதை நினைத்து கிறிஸ்துவின் நாளில் சந்தோஷப்படுவேன். 17  அதோடு, விசுவாசத்தால் நீங்கள் செய்கிற பரிசுத்த சேவையின் மூலம் செலுத்துகிற பலிமீது+ நான் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றப்பட்டாலும்+ சந்தோஷமாக இருப்பேன், உங்கள் எல்லாரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். 18  அதேபோல், நீங்களும் சந்தோஷமாக இருங்கள், என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். 19  நானும் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு சந்தோஷப்படுவதற்காக, நம் எஜமானாகிய இயேசுவுக்கு விருப்பமானால் சீக்கிரத்திலேயே தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்ப நினைத்திருக்கிறேன்.+ 20  உங்களுடைய விஷயங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை. 21  மற்ற எல்லாரும் தங்களுடைய விஷயங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள், இயேசு கிறிஸ்துவுடைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. 22  ஆனால் தீமோத்தேயுவைப் பற்றி உங்களுக்கே தெரியும், அப்பாவோடு சேர்ந்து பிள்ளை+ உழைப்பதுபோல் நல்ல செய்தியை அறிவிப்பதில் என்னோடு சேர்ந்து அவர் கடினமாக உழைத்திருக்கிறார். 23  அதனால், எனக்கு என்ன நடக்கப் போகிறதென்று தெரிந்தவுடன் இவரைத்தான் உங்களிடம் அனுப்ப நினைத்திருக்கிறேன். 24  நம் எஜமானுக்கு விருப்பமானால் நானும் சீக்கிரத்தில் வருவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.+ 25  இப்போது, என் சகோதரரும் சக வேலையாளும் சக வீரரும், நீங்கள் அனுப்பிய தூதுவரும், எனக்குத் தேவையான உதவிகளைச் செய்கிற பணிவிடைக்காரருமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்ப வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.+ 26  ஏனென்றால், அவர் உங்கள் எல்லாரையும் பார்க்க வேண்டுமென்று ஏக்கமாக இருக்கிறார்; அதோடு, அவர் நோய்வாய்ப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரிந்துவிட்டதை நினைத்து மனச்சோர்வடைந்து இருக்கிறார். 27  அவர் நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தது உண்மைதான். ஆனாலும், கடவுள் அவருக்கு இரக்கம் காட்டினார்; சொல்லப்போனால், அவருக்கு மட்டுமல்ல, துக்கத்துக்குமேல் துக்கம் உண்டாகாதபடி எனக்கும் இரக்கம் காட்டினார். 28  அதனால், நான் அவரைச் சீக்கிரத்தில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அவரை மறுபடியும் பார்த்து சந்தோஷப்படுவீர்கள், நானும் வேதனைப்படாமல் இருப்பேன். 29  நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களை வழக்கமாக ஏற்றுக்கொள்கிறபடியே அவரையும் மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அவரைப் போன்ற சகோதரர்களை உயர்வாக மதியுங்கள்.+ 30  ஏனென்றால், எனக்குப் பணிவிடை செய்ய+ நீங்கள் இங்கே இல்லாத குறையை அடியோடு போக்குவதற்காக அவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து, கிறிஸ்துவின் ஊழியத்துக்காக* மரண வாசல்வரை போனார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “எஜமானின் வேலைக்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா