பிலிப்பியருக்குக் கடிதம் 3:1-21

3  கடைசியாக, என் சகோதரர்களே, நம் எஜமானுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருங்கள்.+ எழுதிய விஷயங்களையே எழுதுவதில் எனக்குக் கஷ்டமில்லை, உங்களுடைய பாதுகாப்புக்காகத்தான் எழுதுகிறேன்.  அருவருப்பாக நடக்கிறவர்களை* குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்கிறவர்களை*+ குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள்.  அப்படி மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க யாருக்காவது காரணங்கள் இருந்தால், அது நிச்சயம் நானாகத்தான் இருப்பேன். மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்க காரணங்கள் இருப்பதாக யாராவது நினைத்தால், அவரைவிட எனக்குத்தான் அதிகமான காரணங்கள் இருக்கின்றன:  நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன்,+ இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரெயர்களுக்குப் பிறந்த எபிரெயன்,+ திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்;+  பக்திவைராக்கியமாக இருந்ததால் சபையைத் துன்புறுத்தியவன்,+ திருச்சட்டத்தின் நீதியைப் பொறுத்ததில் குற்றமற்றவனாக இருந்தவன்.  ஆனாலும், நான் லாபம் என்று நினைத்தவற்றை கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைக்கிறேன்.*+  உண்மையில், என் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவுதான் ஈடில்லாத செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாக நினைக்கிறேன்.  திருச்சட்டத்தின் அடிப்படையில் சுயநீதிமானாக இருக்க விரும்பாமல், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில்+ கடவுளால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படவே விரும்புகிறேன்.+ 10  நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்+ தெரிந்துகொண்டு, அவரைப் போலவே பாடுகள் பட்டு,+ அவரைப் போலவே இறந்து,+ 11  எப்படியாவது முந்தின உயிர்த்தெழுதலை+ அடைவதற்கு முயற்சி செய்கிறேன். 12  நான் ஏற்கெனவே அதைப் பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே பரிபூரணம் அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை; கிறிஸ்து இயேசு எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ+ அதை அடைவதற்காகவே முயற்சி செய்கிறேன்.+ 13  சகோதரர்களே, அதை அடைந்துவிட்டேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: பின்னால் இருப்பவற்றை மறந்தபடியே,+ முன்னால் இருப்பவற்றை எட்டிப்பிடிப்பதற்காக ஓடுகிறேன்,+ 14  கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு+ என்ற பரிசைப்+ பெற்றுக்கொள்ளும் லட்சியத்தோடு ஓடுகிறேன். 15  நம்மில் முதிர்ச்சியுள்ள எல்லாரும்+ இதே மனப்பான்மையோடு இருக்க வேண்டும்; எதிலாவது உங்களுக்கு மாறுபட்ட மனப்பான்மை இருந்தால், சரியான மனப்பான்மை எதுவென்று கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 16  முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில்* தொடர்ந்து சீராக நடக்க வேண்டும். 17  சகோதரர்களே, நீங்கள் எல்லாரும் என்னைப் பின்பற்றி நடங்கள்;+ நாங்கள் வைத்த முன்மாதிரியின்படி நடக்கிறவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். 18  நிறைய பேர் கிறிஸ்துவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* விரோதிகளாக நடந்துகொள்கிறார்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் நிறைய தடவை சொல்லியிருக்கிறேன், இப்போதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19  அழிவுதான் அவர்களுடைய முடிவு; வயிறுதான் அவர்களுடைய கடவுள். வெட்கப்பட வேண்டிய விஷயங்களை நினைத்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்; பூமிக்குரிய காரியங்களிலேயே சிந்தனையாக இருக்கிறார்கள்.+ 20  ஆனால், நம்முடைய குடியுரிமை+ பரலோகத்தில் இருக்கிறது;+ அங்கே இருக்கிற எஜமானாகிய இயேசு கிறிஸ்து என்ற மீட்பருக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.+ 21  எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,+ அவர் தன்னுடைய வல்லமையால் நம்முடைய அற்பமான உடலைத் தன்னுடைய மகிமையான உடலைப் போல் மாற்றுவார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நாய்களை.”
நே.மொ., “உறுப்பைச் சிதைக்கிறவர்களை.”
அல்லது, “மனப்பூர்வமாக ஒதுக்கித்தள்ளிவிட்டேன்.”
நே.மொ., “வழக்கப்படி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா