Skip to content

ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?

ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?

பைபிள் தரும் பதில்

 இயேசுவின் பெயரில் ஜெபம் செய்தால் மட்டும்தான் கடவுள் நம் ஜெபத்தைக் கேட்பார். “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு தன்னுடைய விசுவாசமுள்ள அப்போஸ்தலர்களிடம் சொன்னார். (யோவான் 14:6) “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்” என்றுகூட அவர்களிடம் சொன்னார்.—யோவான் 16:23.

இயேசுவின் பெயரில் ஜெபிப்பதற்கு இன்னும் சில காரணங்கள்

  •   இயேசுவுக்கும் அவருடைய தகப்பனான யெகோவா தேவனுக்கும் நாம் மதிப்புக் காட்டுகிறோம்.—பிலிப்பியர் 2:9-11.

  •   நம்முடைய மீட்புக்காகக் கடவுள் செய்த ஏற்பாடுதான் இயேசுவின் மரணம் என்பதை நாம் மதித்துணருகிறோம்.—மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 4:12.

  •   கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இயேசு வகிக்கிற விசேஷப் பங்கை நாம் புரிந்திருக்கிறோம்.—எபிரெயர் 7:25.

  •   கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற நமக்கு உதவுகிற தலைமைக் குருவாக இயேசு செய்யும் சேவையை நாம் மதிக்கிறோம்.—எபிரெயர் 4:14-16.