Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 72

இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்

இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்

(அப்போஸ்தலர் 20:20, 21)

  1. 1. எங்கே செல்வோம் என்றே தினம்,

    தள்ளாடினோம் அந்நாளில் நாம்.

    தேவனே தன் வார்த்தையால்,

    நம் வாழ்வின் பாதை காட்டினார்.

    இப்போது நாம் விண்ணாட்சியை,

    நம் வாழ்விலே முன்னால் வைத்தோம்.

    போற்றினோம் யெகோவாவை,

    சந்தோஷம் பூத்ததே நம் வாழ்விலே.

    எங்கெங்குமே நாம் போகின்றோம்,

    வீதி என்றும் வாசல் என்றும்,

    அன்பாகவே எல்லாருக்கும்,

    நற்செய்தி இன்று சொல்கின்றோம்.

    தேனீக்கள் போல் இவ்வேலையில்,

    ஒன்றாக நாம் தொண்டாற்றுவோம்.

    பூமியில் யெகோவாவே,

    உன்னத தேவன் என்று காட்டுவோம்.