Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. இதோ, வெகு விரைவிலே பூமி பூத்திடும்!

    இதை எந்தன் இதயம்தான் நன்றாக அறியும். 

    எல்லாம் அறிந்த போதிலும்

    இதயம் மெதுவாய் அழும்.

    நம் கண்களால் காணாததை கண் முன்னாலே வைத்திட

    மனம் மறுக்கின்றதே! 

    (பல்லவி)

    உடன் ஜெபித்தால் கேட்பாரே! 

    கண்ணீரில் கரையும்போது

    பாரம் உம்மேல் வைக்கின்றேன்.

    என்னோடு நீர் இருப்பதால்,

    உம் வார்த்தையை தந்ததால்,

    வலிகள் மறக்கின்றேன்.

    கவலை இல்லாத தினமில்லை.

    இதை உணர்ந்தால் நல்லது. 

    நாளைய தினம் நாளை பார்ப்போம். 

    இன்றை பற்றி நாம்

    இன்று யோசிப்போம். 

  2. 2. சுகங்களும் சுமைகளும்

    நம் வாழ்வில் உண்டு. 

    சுமைகளைப் பார்க்காமல் 

    சுகங்களை பார்த்திடு. 

    நமக்காக மகனை 

    தேவன் தந்தார் பலியாக. 

    அவரன்பை சொல்லிடவே, 

    வார்த்தையில்லை நம்மிடமே.

    அவரை நம்பிடு! 

    (பல்லவி)

    ஜெபித்தால் கேட்பாரே!

    கண்ணீரில் கரையும்போது 

    பாரம் உம்மேல் வைக்கின்றேன். 

    என்னோடு நீர் இருப்பதால், 

    உம் வார்த்தையை தந்ததால், 

    வலிகள் மறக்கின்றேன். 

    கவலை இல்லாத தினமில்லை. 

    நாம் உணர்ந்தால் நல்லது.

    நாளைய தினம் நாளை பார்ப்போம்.

    இன்றை பற்றி நாம்

    இன்று யோசிப்போம். 

    (பல்லவி)

    ஜெபித்தால் கேட்பாரே!

    கண்ணீரில் கரையும்போது 

    பாரம் உம்மேல் வைக்கின்றேன். 

    என்னோடு நீர் இருப்பதால், 

    உம் வார்த்தையை தந்ததால், 

    வலிகள் மறக்கின்றேன். 

    கவலை இல்லாத தினமில்லை.

    நாம் உணர்ந்தால் நல்லது. 

    நாளைய தினம் நாளை பார்ப்போம். 

    இன்றை பற்றி நாம்

    இன்று யோசிப்போம். 

    இன்று யோசிப்போம்.